search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் நகை திருட்டு"

    ராமேசுவரம் கோவிலில் பெண்ணிடம் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    மதுரை மாவட்டம் வலையங்குளம் பெருமாள் நகரை சேர்ந்தவர் அழகுமீனா. இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் ராமேசுவரத்துக்கு சென்றார்.

    ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்ற அழகுமீனா அங்குள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடுவதற்காக வரிசையில் காத்திருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் அழகுமீனா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை நைசாக பறித்து கொண்டு தப்பினார்.

    சிறிதுநேரம் பின் நகை திருடுபோனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அழகுமீனா இதுகுறித்து ராமேசுவரம் கோவில் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்மநபரை தேடி வருகிறார்.

    ராமேசுவரம் கோவிலில் இதுபோன்று நாள்தோறும் பக்தர்கள் நகை-பணத்தை இழக்கும் சம்பவம் அதிகாரித்துள்ளது. எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து கோவில் திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேனி அருகே தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.

    தேனி:

    தேனி அருகே வயல்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சுருளிமணி (வயது 53). இவர் சம்பவத்தன்று வீட்டின் மேல் மாடியில் தூங்கச் சென்றார். அப்போது தனது 5½ பவுன் செயினை ஒரு பையில் வைத்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்கி விட்டார்.

    அதிகாலையில் எழுந்து பார்த்தபோது செயினை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் சுருளிமணி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் செயினை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×